புதன், 28 அக்டோபர், 2015

நூல் விமர்சனம்ஃ


சோட்டா பீம்  - சென்ரியு நூல்.
*
சமீப காலமாக ஹைக்கூ, சென்ரியு என்ற வகைமைகளை இனம்பிரித்து தனித்தனியாக எழுதும் போக்கு தென்படுவது ஆரோக்கியம் அளிக்கின்றது. சென்ரியு கவிதைகள் முன்வைத்து இதுவரை 13 நூல்கள் வெளிவந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வகையில் “ சோட்டா பீம் ” – நீலநிலா செண்பகராசன் அவர்களின் நூல் பதிமூன்றாவது ஆகும். இதில் ‘ சென்ரியு கவிதைகள் ஒரு பார்வை ‘ சிறுகட்டுரை இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல, ஆய்வாளர். செ.ஜோதிலட்சுமியின் ஆய்வேட்டிலிருந்து சென்ரியு குறித்த சுருக்கமான பகுதி இடம்பெற்றுள்ளது சிறப்பான பணி.
சமூக அரசியல் பண்பாட்டு செயல்பாடுகளைக் கவிதையில் எள்ளி நகைக்கிறார். மக்களின் அவலநிலையினைச் சுட்டுகிறார்.  அத்துடன்,
குழந்தைகள் ரசித்தனர்
“ சோட்டா பீம் “
வரையப்பட்டஅமரர் ஊர்தி.
*
சோட்டா பீம் “
மதுவில் மிதக்கும் குழந்தைகள்
காவு வாங்கும் கார்டூன் கதாநாயகன் -  என்று தலைப்பிற்குரிய இரு சென்ரியு கவிதைகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இன்னும் முழுமையாக சோட்டா பீம் –மில் குழந்தைகள் சார்ந்த சென்ரியு கவிதைகளைப் படைத்திருந்தால் சிறப்பானத் தொகுப்பாக அமைந்திருக்கும் என்பது எனது கருத்தாகும். சென்ரியுக்கே உரிய தன்மையில் 69 கவிதைகளைப் படைத்தளித்துள்ள நீலநிலா சண்பகராசன் .முயற்சி வரவேற்கத்தக்கதும் பாராட்டுக்குரியதுமாகும்  
விமர்சனம் : ந.க.துறைவன் வேலூர் – 532 009.
செல் ; 9442234822.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக