*
நடுங்கும் விரல்கள்
குழந்தையின் கையில்
தீப்பந்தம்.
*
சிதறிய வண்ணக்
கிண்ணம்
தரை வரைந்த
ஈர ஓவியம்.
*
யாரோ யாரையோ
திரும்பிப் பார்க்கிறார்கள்
எல்லோரும்.
*
விழுந்துக் கடக்கிறது
காலடிகளி லெல்லாம்
செத்த சுயமரியாதை.
*
மெதுவாய் வீசுகிற
காற்றிற்குக் கூட
வாலாட்டுகிறது
சருகுகள்
.
* ஒரே நாளில் இரு
விருது பெற்றுள்ள
நண்பர். மு.முருகேஷ்
அவர்களுக்கு
வாழ்த்துக்கள்.
பாராட்டுக்கள்.
ஆருயிர் கவிதைத் தோழர் மு.முருகேஷ் ஹைக்கூ சக்கரவர்த்தி.
பதிலளிநீக்குஅருமை ஐயா..,
பதிலளிநீக்குநான் ஹைக்கூ மாணவன் உங்கள் ஹைக்கூ கவிதைகளைப் படிக்க முயல்கிறேன்...
அருமை ஐயா!
பதிலளிநீக்குஹைக்கூ!
பேரம் பேசி முடிந்ததும்
கழுத்தில் ஏறியது
தாலி