வெள்ளி, 21 மார்ச், 2014

ந.க.துறைவன் {ஹைபுன்} கவிதை

*
கிராமத்தில் உறவினர் ஒருவரின் சாவிற்கு செல்ல
நேர்ந்தது. அங்குப் போய்ச் சேர்ந்தவுடன், அங்குள்ள
பெண் உறவினர்கள் எங்களைப் பார்த்தவுடன் எழுந்து
வந்துக் கட்டியணைத்து அழுதார்கள். வாங்கி வந்த
பூமாலையை கண்ணாடியின் மேல் வைத்து அஞ்சலி
செய்துக் கொஞ்ச நேரம் நின்றேன். அருகில் வந்து
நின்ற மற்றொரு உறவினர், என்னை அழைத்துச்
சென்று நாற்காலியில் உட்கார வைத்து விட்டு
நடந்துக் கொண்டிருந்தக் காரியங்களைப் பற்றி
விவரித்தார். பாடைக் கட்டும் வேலைகள் வேகமாக
நடந்தேறிக் கொண்டிருந்தன.
*
அழுதவர்கள் ஒய்வெடுத்தனர்
புதியதாக வந்தவர்கள் அழுதார்கள்
கண்ணீரில் குளித்தன கண்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக