சனி, 22 மார்ச், 2014

தேர்{ஆறு}தல் சென்ரியு கவிதைகள்


*
இப்பொழுது எங்கே இருக்கிறது
தமிழ்,தமிழர் பண்பாடு,தமிழர் கொள்கை
வளர்த்தத் திராவிடம்.
*
பரபரப்பான பிரவேசம்
விரித்த வலையில் வீழ்கிறது
ஊழலை எதிர்த்தக் கட்சி.
*
பேசாமல் இருந்து சாதனைப் புரிந்தப்
பாராளமன்ற உறுப்பினருக்கு
பாராட்டுக் கேடயம் பரிசளிப்பு.
*
கட்சியிலிருந்து நீக்கப் பட்டவர்
பத்து நாளில் துவங்கினார்
புதிய கட்சி..
*
கூட்டணி விருந்தில்
பரிமாறப் பட்டது
சுவையான மாங்கனி.
*



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக