செவ்வாய், 18 மார்ச், 2014

புலன்பசி!

அமரன் கவிதாவெளி
*
புறமென்ன, அகமென்ன-
அவ்வப்போது தலை நீட்டும்
அவரவர் புலன்பசி!
*
மப்பும் மந்தாரமாய்
வானில் கண்ணாமூச்சி ஆட்டம்
பொய்யாச்சு மழை மட்டும்.                  
*
சுகந்த வைகைறையும்
மாமிசத் துண்டாடும் ஒரு சிலர்…
வரங்கள்-சாபங்கள்.
*
இருட்டும் நரகந்தான்
குருதி வாசம் வெருட்டி வர
இரட்சிப்பில் செங்கதிரோன்.
*
உதிர்ந்துப்போ. காற்றே
அன்னை மடியென்றமைதியிலே
கண்கள் துயிலட்டும்.
-நன்றி:-  மகாகவி-இதழ்-பிப்ரவரி-2014.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக