திங்கள், 10 மார்ச், 2014

ஆலமரங்கள்.

கவிஞர்.மித்ராவின் ஹைக்கூ கவிதைகள்
*
காற்றின் சிறகுகள்
முறிபடும் முட்களில்
வருந்தும் மேகம்.
*
மெல்ல நட குருவியே
உடைந்து விடப் போகிறது
புல்லில் பனித் துளி.
*
பழம் கோயில்களில்
நூற்றாண்டு கதை பேசும்
ஆலமரங்கள்.
*
இரவு முழுவதும்
தூங்க விடவில்லை
குயிலின் சோகம்.
*                     
பின்னிக் கிடக்கும்
சிலந்தி வலைச் சிக்கல்கள்
வாழ்க்கை.
*
பறி போனது
அணிலின் சுதந்திரம்
கிளைகளில் தேன் கூடு.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக