திங்கள், 31 மார்ச், 2014

" முட்டாள்கள் தினம் {சென்ரியு }


*
முட்டாள்கள் தினம்
கொண்டாடி மகிழ்ந்தன
நன்றியுடன் நரிகள்.
*
பிரியாணி சமைப்பதற்கு
பறவைகளைச் சுட்டார்கள்
ஆட்டங் காட்டியது காக்கைகள்.
*
கூட்டம் கூட்டமோ கூட்டம்
ஒரு நைட்டி வாங்கினால்
இன்னொரு நைட்டி இலவசம்.
*
சேமித்தப் பணத்திற்குச்
செய்கூலி சேதாரம் இல்லாமல்
வாங்கினார்கள் நகைகள்.
*
கோடிக் கணக்கில் சுருட்டிக் கொண்டு
தலைமறைவாகி விட்டார்கள்
முதலீட்டாளர்கள் கவலை வேதனை.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக