திங்கள், 24 மார்ச், 2014

மௌனக் கண்ணீர்

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
*
வேதனைத் தாங்க முடியாமல்
வெடித்து வெளியேறுகின்றன
அவளது மௌனக் கண்ணீர்
*
மாப்பிள்ளை பெண்ணுக்கும் போட்டி
விட்டுக் கொடுத்து யார் எடுப்பது?
குடத்திற் குள்ளிருக்கும் மோதிரம்.
*                              
வலியில் துடித்தான்
தடவினார்கள் சுண்ணாம்பு
தேள் கொட்டிய இடத்தில்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக