திங்கள், 3 மார்ச், 2014

கிறுக்கல்கள்

கவியருவி ம.இரமே’ஷ் சென்ரியு கவிதைகள்
*
குழந்தையின் கிறுக்கல்கள்
புரியாமல் வியக்கும்
குப்பை கிளறும் கோழி.
*
எச்சில் இலை எடுக்க
தடுத்து நிறுத்தப்பட்டது
அவர்களுக்கும் ஒரு பந்தி.

செய்தி வந்ததும்
தொலைக்காட்சி அணைப்பு
சமையல் நேரம்.
*
நதிக் கரையில்
சந்தித்துக் கொண்டன                                        
நீர்த் தேடி வந்த கொக்குகள்
*
கண்ணைப் பார்த்துப் பேசு
சாத்திய மில்லை
எப்போதும் காதலர்க்கு
*
ஆதாரம்:- கவியருவி ம.இரமேஷ்-சின்
“ஓராயிரம் சென்ரியு-என்ற தொகுப்பிலிருந்து.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக