திங்கள், 10 மார்ச், 2014

அரட்டைக் கச்சேரி

ந.க.துறைவன் லிமரைக்கூ கவிதைகள்
*
சுவைக்கிறார்கள் கடலைப் பொரி
ஆல மரத்தின் கீழ் அமர்ந்துப்
பெரிசுகளின் அரட்டைக் கச்சேரி
*
எல்லாமே இப்பொ.ழுது சரி
எதற்காக வெண்ணிறமாய்
நெற்றியில் ஒற்றை வரி்
*
தினமும் காலையில் பஸ்கி்
எடுத்து உடலை வளர்ப்பவன்
இரவில் அருந்துகிறான் விஸ்கி
*
அழுது அடக்கினால் விம்மல்
நிறுத்த முடி.யவில்லை அவளால்
திடீரென வந்து விட்டத் தும்மல்.
*
வாங்கிக் கொத்த வுடன் எக்காளம்
அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்து
தானும் உண்டான் மக்கா சோளம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக