வியாழன், 15 செப்டம்பர், 2016

முரண்பாடுகள்...!! ( ஹைபன் )



எந்தவொரு பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும், அதில் இருவேறு கருத்துக்கள் உள்ளடங்கியிருக்கிறது. அதில் எது உண்மை? எது பொய்? என்று நிரூபிப்பது கடினமான காரியமாகும். வாழ்க்கை முழுக்கவுமே மனிதர்களிடையே இம்முரண்பாடுகள் மலிந்து காணப்படுகின்றன. பேச்சுக்கும் செயல்பாடுகளுக்கும் நடைமுறைக்குமான இம்முரண்பாடுகளை நேரிடையே கண்டறியலாம். முரண்பாடுகள் என்பது இயற்கையின் நியதியிலிருந்து தொடங்கி மனித வாழ்வின் எல்லை வரை தொடர்கின்றது. முரண்பாடுகள் இன்றி எதுவுமேயில்லை. முரண்பாடுகளோடு தான் சமூகமே வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.

முரண்பாடுகளை வென்றெடுத்து தான்
முளைவிட்டு எழுகின்றன
மண்ணில் விதைக்கும் விதைகள்.
ந.க.துறைவன்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக