திங்கள், 27 ஜனவரி, 2020

மழை ( ஹைக்கூ கவிதைகள் )

1.
கொட்டிய மழையில்
நனைந்து வந்தார் பால்காரர்
பாலில் நீர் இறங்கவில்லை.
2.
இலைகள் மட்டும் தெரிகின்றன
ஈக்கள் சில பறந்து அலைகிறது
கிளையில் தொங்கும் தேன்கூடு.
3.
எங்கோ அலைகின்றன
கட்டுப்பாடு இல்லாத மனம்
மௌனமாய் மலைமேல் கழுகு.

ந க துறைவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக