ந.க.துறைவன் சென்ரியு
கவிதைகள்
1.தாளம் போட்டு
சிரித்தது
தாத்தாவின்
தொந்தியைத் தட்டி
மடியில் உட்கார்ந்தக்
குழந்தை
.
2.மருத்துவர் கொடுத்த
மருந்தால்
அழிந்தது
குழந்தை வயிற்றில்
பூச்சிகள்
.
3.தங்கச் சங்கலி
பறித்தவன்
நம்பிக்கைத் தகர்ந்துப்
போனது
கிடைத்ததோ கவரிங்
நகை
.
4.வலது கைமணிக்
கட்டில்
கலர்
கலராய்
கோயிலில்
வாங்கியக் கயிறுகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக