புதன், 26 பிப்ரவரி, 2014

கவரிங் நகை

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

1.தாளம் போட்டு சிரித்தது
தாத்தாவின் தொந்தியைத் தட்டி
மடியில் உட்கார்ந்தக் குழந்தை
.
2.மருத்துவர் கொடுத்த மருந்தால்
அழிந்தது
குழந்தை வயிற்றில் பூச்சிகள்
.
3.தங்கச் சங்கலி பறித்தவன்
நம்பிக்கைத் தகர்ந்துப் போனது
கிடைத்ததோ கவரிங் நகை
.
4.வலது கைமணிக் கட்டில்
கலர் கலராய்

கோயிலில் வாங்கியக் கயிறுகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக