கவியருவி.ம.இரமேஷ்
ஹைக்கூ கவிதைகள்
1. பூக்களைப் பார்த்ததும்
ஆனந்தம் அடைந்தது
வண்ணத்துப் பூச்சிகள்.
2. ஆடை
உடுத்தலில் இருக்கிறது
பூக்களின் அழகு.
3.
கூடு திரும்ப வில்லை
கடைசி சுள்ளிக்காகப்
பறந்தப் பறவை.
.4. நெருப்பில்லாமல்
புகைகிறது
தூரத்துப் பனை மரம்.
5. கனவின்
பொருள்
என்றாவது அறிந்திருக்குமா?
ஆதாரம்; ‘பனித் துளியில் பனை மரம்’
என்ற
தொகுப்பிலிருந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக