திங்கள், 27 ஜூலை, 2015

அஞ்சலி கவிதை.

ஜனாதிபதி ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் கவிதை.
*
ஒ! மனிதா,
எனது படைப்பில் சிறந்தவனே!
உனது வாழ்வு நிற்காத நீண்ட பயணம்!
அதில் மாந்தர் அனைவரும் இணையும் வரை
மற்றவர் சுகத்தில்
மற்றவர் துயரத்தில்
மனதார மூழகுங்கள்
எனது வடிவான பேரானந்தம்
உன்னுள் பிறக்கும்
அதுதான் மனிதத்தின் அழியாத அடையாளம்.
வாழ்வின் பாதையில்
தினமும் உங்களுக்குத் திகட்டும் வரை பாடம்.
அதனாலேயே
நீங்கள் தாம்
எனது படைப்பில் சிறந்த படைப்பு.
*
ஆதாரம் ;- எழுச்சி தீபங்கள் – நூல் – பக்கம் – 26.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக