ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

கவிஞன்...!!

போலந்து கவிஞரான டேட்யூஸ் ரோஸ்விக்ஸின் ஒரு கவிதை.
*
கவிஞன் என்பவன் யார்?
கவிஞன் என்பவன் கவிதை எழுதுகிறவன்
கவிஞன் என்பவன் கவிதை எழுதாமல் இருக்கிறவன்.
கவிஞன் என்பவன் தளைகளைத் தகர்ப்பவன்
கவிஞன் என்பவன் தளைகளைப் பூணுகிறவன்
கவிஞன் என்பவன் நம்புகிறவன்
கவிஞன் என்பவன் நம்ப முடியாமல் போகிறவன்
கவிஞன் என்பவன் பொய் சொன்னவன்
கவிஞன் என்பவன் பொய்களைப் பெற்றுக் கொண்டவன்.
வீழ முனைபவன்
தன்னைத்தானே உயர்த்திக் கொள்கிறவன்
கவிஞன் என்பவன் விலகிப்போக முயல்பவன்
கவிஞன் என்பவன் விலகவே இயலாதவனும் கூட.
*
ஆதாரம் ; காலச்சுவடு – பிப்ரவரி – 2016 – பக்கம் 69.
தகவல் : ந.க.துறைவன்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக