செவ்வாய், 10 ஜனவரி, 2017

புத்தகங்கள்...!!




1.
உணர்வுப் பூர்வமானது புத்தகங்களின் தொடு உணர்வு.

2.
புத்தகங்களை நான் பார்த்தேன்.
புத்தகங்கள் என்னைப் பார்த்தன
வாங்கியதைப் பார்த்துச் சிரித்தன.

3.
கூச்சப்படாமல் விரும்பித் தொட்டுப் பார்க்க அதிக
உரிமைக் கொடுப்பது புத்தகங்கள் மட்டுமே.

4.
குழந்தையைப் போல அவள் மார்பில் அணைத்துச் செல்கிறாள் புத்தகங்கள்.

5.

விரித்து வைத்து புத்தகங்களின் எழுத்தின் மீது ஆழ்ந்த விழிகள்  

6.

புத்தகங்கள் தருவது அறிவின் வழி ஆழ்ந்த மௌனம்.

ந.க.துறைவன்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக