செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

துங்காமல் தூங்கி...‘!! [ ஹைக்கூ }

N.G. THURAIVAN'S HAIKU.
*
கிரிவலப் பாதை நெடுக
பக்தர்கள் பேச்சின் இரைச்சல்
அச்சத்தில் பறவைகள்.
*
கருந் திராட்சைப் பழம்
ருசித்துச் சாப்பிடும் தருணம்
பால் குடித்த நினைவு.
*
செடி மறைவில் ஒய்வாய்
தூங்காமல் தூங்கி அழகாய்
விழித்திருக்கிறது முயல்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக