வெள்ளி, 18 அக்டோபர், 2019

அர்த்தநாரி...!! ( ஹைக்கூ கவிதைகள் )

சக்தி சிவனுக்குள்
சிவன் சக்திக்குள்
எல்லாமே அணுவுக்குள்…!.
*

மாம்பழம் கையில் வைத்து
பால் குடிக்கிறது
அழுகிற குழந்தை.
*
 “ நெருங்கி வராதே ” என்று
வண்ணத்துப்பூச்சிக்கு
கையசைக்கிறது மலர்கள்.
*
மனம் குளிர்ந்ததோ?
மௌனமாய் சிரிக்கிறான்
அபிஷேகப் பிரியன் சிவன்.
*
சிறகை உதிர்த்துப் போனது
அடையாளத்திற்காக
இணையைத் தேடிய பறவை.

ந க துறைவன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக