வியாழன், 24 அக்டோபர், 2019

மழைநீர் ( ஹைக்கூ கவிதைகள் )

1.
குளிர்கால மரங்கள்
ஒவ்வொரு நாளும் வானில்
ஊர்ந்திடும் அதிக மேகங்கள்.
2.
கழுவி செல்கிறது
சுத்தமில்லாத பாதையில்
நடந்த கால்களை மழைநீர்.
3.
உடல் சிலிர்ப்பி
தலை துவட்டுகிறது
மழையில் நனைந்த குருவி.
4.
ஊருக்குள் வந்தால் இரைச்சல்
மலைக்குச் சென்றால் மௌனம்
சலித்துக் கொண்டது மனம்.
5.
சிவந்து விட்டது அழகாய்
பச்சை இலையில்
கிளிகள் வைத்த முத்தங்கள்.

ந க துறைவன்.

1 கருத்து: