வெள்ளி, 11 ஜூலை, 2014

கண் விழித்து..!! [ ஹைக்கூ ]

NA.GA.THURAIVAN'S HAIKU
*
*
தூர்வாரிய குளத்தில் கிடைத்தன
நூற்றாண்டு கால
ஐம்பொன் சிலைகள்.
*
வாழைத் தோப்பை அழித்தன
நீர்த் தேடி ஊருக்குள் புகுந்தக்
காட்டு யானைகள்.
*
மாந்தோப்புக்கு காவல்
இரவு கண்விழித்து
மௌனமாய் ஆந்தைகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக