புதன், 16 டிசம்பர், 2015

மார்கழி - உலக சர்வமத மாதம்...!!

ஹைபுன்
*
பருவகாலங்களில் மார்கழி பனிக்காலம் இயற்கை மனிதர்களுக்கு வழங்கிய அருட்கொடை.எனலாம். ‘ மாதங்களில் மார்கழி நான் ‘ என்கிறான் பகவத்கீதையில் கண்ணன்.. மார்கழி மாதத்தை எல்லா ஆன்மீக இலக்கியங்களும்  மிகப் போற்றி விதந்தோதுகின்றன. ஆண்டாள் மார்கழியில் மாதவனை துயில் எழுப்புகிறாள். சோம்பித் துயிலும் பெண்தோழிகளை எழுப்பி, விழி்ப்புணர்வையூட்டித் துணைக்கு அழைக்கிறாள். ஏசுவின் பிறப்பு, இஸ்லாமின் மிலாடி நபி என விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மார்கழி மாதம் உலகெங்கும் உள்ள ஆன்மீகவாதிகளின் புனித மாதமாகவும் திகழ்கின்றன.என்பதை வரலாற்றில் என்றும் காணலாம்.
*
1.                              
அமைதி மௌனம் சக்தி தரும் ` 
ஆன்மீக உலகம் போற்றும்      
மாதம் மார்கழி. 
*
2.
ஆண்டாள் போற்றும்
ஆன்மீக மாதம். 
மார்கழி்   
ந.க.துறைவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக