வியாழன், 11 செப்டம்பர், 2014

ஞானம்...!! [லிமரைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S LIMARAIKU.
*
மூதாதையர்க்குத் தெரிந்தது மண்கலம்
இளந் தலைமுறைக்குத் தெரிந்தது
விஞ்ஞானச் சாதனம் விண்கலம்.
*
வீதியில் ஒரே பரபரப்பு
சாதிக் கலவரம் சூழ்ந்த நகரம்
பீதியில் கடையடைப்பு.
*
மனிதருக்குப் பிடித்தது மதுபானம்
போதையிலே பிறந்தது சிலருக்கு
கவிதை மெய் ஞானம்.
- ந.க.துறைவன் லிமரைக்கூ கவிதைகள்

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக