செவ்வாய், 2 செப்டம்பர், 2014

மிரட்டல்...!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
நிமிர்ந்து துணிந்து வாழும்
புல்லின் வாழ்க்கைக்கு
வியாக்கியானம் தேவையா?
*
இறப்புக் காலம் வரை
நினைவில் நிற்கின்றது
பிறந்த ஊரின் நினைவு.
*
இளமையை நினைவூட்டுகிறது
விளையாடிக் களித்தக்
கிராமத்தின் மாந்தோப்பு.
*
எப்பொழுதும் கேலி செய்வாள்?
தூக்கி மடியில் வைத்து
கொஞ்சி வளர்த்தப் பாட்டி.
*
பழம் பொறுக்கப் போனால்
மிரட்டி விரட்டுவார்கள்
நாகமரத்தில் முனீஸ்வரன்.
*



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக