செவ்வாய், 16 செப்டம்பர், 2014

பாசமாய்...!! [ சென்ரியு ]







*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
அப்பாவை விரும்புகிறாள் மகள்
அம்மாவை வெறுக்கிறான் மகன்
ஆதிக்கம் செய்கிறது உளவியல்.
*
எட்ட நின்று  பார்க்கும் குழந்தை
அம்மாவின் மடியில்
வளர்ப்புப் பூனை.
*
கணவனின் கோபத் தெரிப்பு
மனைவி அழுகிறாள்
அருகில் சிரிக்கிறது குழந்தை.
*
அடிக்க வரும் அம்மாவை
வெறுப்பேற்றுகிறான்
குறும்புக்காரப் பாச மகன்.
*
பெண்ணின் துயர மனமாய்
காற்றில் பறந்துக் காய்கிறது

கொடியில் துணிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக