செவ்வாய், 9 செப்டம்பர், 2014

முன்னேற்றம்...!! [ சென்ரியு ]

*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
கழுதைக்கு கல்யாணம் செய்கிறார்கள்
நாய்க்கு கல்யாணம் செய்கிறார்கள்
முற்போக்காக சிந்திக்கிறார்கள் மனிதர்கள்.
*
எந்த வேலையும் உருப்படியாகச் செய்யாமல்
அலைந்து அலைந்து எங்கும்
நிற்காமல் ஒடுகிறது நாய்கள்.
 *
வெளியில் போய் வரவே பயம்
அஞ்சுகிறான் மனிதன்
பாதுகாப்பாக இருக்கிறது நாய்கள்.
*
எப்பொழுது நடந்ததோ தெரியவில்லை
சம்பவம் யாரும் பார்க்கவி்ல்லை
பாதையில் நசுங்கிக் கிடந்தது நாய்.
*
மனிதர்கள் சைகையில் காட்டுகிறார்கள்
வாலையாட்டிக் காட்டுகின்றது நாய்கள்
அன்புடன் நன்றி.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக