புதன், 14 மே, 2014

அலைகிறான் கருடன்...‘‘ { ஹைக்கூ }.

*
எவற்றோடும் எவரிடமும்
தொடர்பு கொள்கிறேன்
டெலிபதியில் நினைத்த போது….!
*
அங்கு வாழ்கின்ற பல்லி
வௌவால்களுக்குத் தெரியம்?
கோயிலின் நூற்றாண்டு ரகசியம்.
*
அடியும் முடியும் இன்னும்
காணாமல் தேடித் தேடி
அலைகிறான் கருடன்.
*
தேவர்களுக்கு மனக் கலக்கம்
என்ன நிகழுமோ வென்ற பயம்?
நாரதன் வருகை அறியும் போதே….!.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக