வியாழன், 15 மே, 2014

ஆலமரத்தடியில்...!! { சென்ரியு }.

*
Na.Ga. Thuraivan's Senryu.
ஆலமரத்தடியில்
வெயிலுக்கு காற்றோட்டமாய்
விளையாடுகிறார்கள் தாயம்.
*
சுற்றுலா பயணிகளை
வேடிக்கைப் பார்க்கின்றன
ஊட்டி மலர்கள்.
*
தொப்பியை எடுத்துவிட்டார்
வழுக்கைத் தலை
முழுக்க வியர்வை.
*
அனல் புழுக்கம் தாங்காமல்
செடியின் புதருக்குள்
தூங்குகிறது முயல்.
*
கோடை மழைக் காற்றுக்கு
முறிந்து விழுந்தது
முருங்கை மரம்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக