செவ்வாய், 6 மே, 2014

நன்றி சொல்லுங்கள்...!! [ஹைக்கூ }.


*
சூரியனை சிறைப் பிடிக்க
தாமரையின் முயற்சி
முழ்கித் தவிக்கும் மரம்.
*
மௌனத்தில் கசியும்
ஆரவாரமற்ற நெஞ்சு
இயலாமையற்று சோகம்.
*
பிளவுப்பட்டது
ஒன்றுபட்ட வீடு
தடை மீறும் குருவிகள்.
*
மலர்ந்தும் மௌனம்
இறந்தும் கவனம்
நிரந்தரமற்ற உயிர்ப்பு.
*
நன்றி சொல்லுங்கள்
உங்களுக்காய் தவம்
பேரூந்து நிழற்குடை.
***
ஆதாரம் : jதிரு. செல்லம்மாள் கண்ணனின்“
“ காலச் சிறகு ” – என்ற கவிதை நூல்.
***


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக