வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

ஆடிப் பொங்கல்..!! [ சென்ரியு ]


*
சாமிமருள் வந்து ஆடி
அருள்வாக்கு சொல்கிறாள்
பூசாரிக்குப் பூரிப்பு.
*
அம்மன் கேட்டாளா?
ஆடிப் பொங்கல் விழாவில்
கோழிகள் காவு.
*
அம்மன் கொடைவிழாவில்
ஆதிக்கப் போட்டி
ஊருக்குள் கலவரம்.
*
வாலிபர்கள் தூங்கவில்லை
துள்ளியாட வைத்தது
இரவுக் கரகாட்டம்.
*
கல்யாண வரங்கேட்டு
வேப்பிலை ஆடைக்கட்டி
பூஜித்தாள் கன்னிப் பெண்.
*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக