ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

இலை உதிர்காலம்....!! [ ஹைபுன் ]

*
NA.GA. THURAIVAN'S HAIBUN.
*
அவன் எதற்காகத் தற்கொலை செய்துக் கொண்டான் என்று பலரும் பலவிதமான கற்பனைக் கேள்விளைப் புனைந்துப் பேசிக் கொண்டனர். உண்மையான நிலவரம் அவனுக்கோ, அவனது நேசிப்பிற்குரியவர்களுக்கோ மட்டும் தெரிந்தோ, தெரியாமலோ கூட இருக்கலாம். உறுதியற்ற மனம், நம்பிக்கையற்றப் போக்கு, எப்பிரச்சினையிலும் தெளிவின்மை, வாழ்வின் சரியானப் புரிதலின்மை ஆகியன அவனின் பலவீனமோ? மட்டுமல்ல, அரை நொடிக்குள் எடுக்கின்ற அவசரமுடிவே அவனின் தற்கொலைக்கான முடிவாகி, எத்தனைப் பேரை சிக்கலுக்குள்ளாக்கி விடுகிறது?
நீ போய்விட்டாய்
நான் வாழ்கிறேன். இன்று
பிறந்தது இலைஉதிர்காலம்.
- ந.க. துறைவன் ஹைபுன் கவிதை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக