வியாழன், 28 ஆகஸ்ட், 2014

வரவேற்பு...!! [ சென்ரியு ]

*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
ஒன்றை ஒன்று மோதாமல்
குறித்தப் பாதையில்
பயணிக்கின்றன பறவைகள்.
*
வாசல்கேட்டில் அமர்ந்து
கத்திக்கத்தி ஏதோவொரு
தகவலைச் சொல்கிறது காக்கை.
*
வெளிநாட்டிலிருந்து வருகிறான் மகன்
உறவினர்களோடு பயணித்தது
வரவேற்க செல்ல நாய்க்குட்டி.
- ந.க. துறைவன் சென்ரியு கவிதை.
*

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக