வியாழன், 10 ஏப்ரல், 2014

வலி தாங்காமல...

வலி தாங்காமல்
கதறி அழுகிறது
காதல் கவிதைகள்.
*
எங்கெங்கோ தேடிக் கண்டுபிடித்தான்
பெட்டிக்குள்ளிருந்தது
காணாமல் போன விமானம்..
*
யாரேனும் கொஞ்சம்
சிரித்துக் காட்ட முடியுமா?
அகம்பாவச் சிரிப்பு.
*
கோடைத் தாகமோ?
தண்ணீர் இல்லாதத்
தொட்டியின் மீது காகம்.
*
கிருஷ்ணர் வேஷம் போட்டு
அழகு பார்த்தார்கள்
மொட்டை அடிக்கும் முன்…!

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக