சனி, 12 ஏப்ரல், 2014

கோடை கவிதைகள்.

புங்க இலை மறைப்பில்
குளிர்ச்சியா யிருக்கிறது
கூடை நிறைய  நுங்கு
*
பதனீர் விற்பவள்
முகத்தில் வழிகிறது
முத்து முத்தாய் வியர்வை.
*
அரைமணிக் கொரு தரம்
குளிக்க வைக்கிறாள்
சலித்துக் கொள்கிறது பூக்கள்.
*
கோடை வெப்பம்
வாய்க்கால் நீரில்
குளிக்கின்றன வாத்துக்கள்.
*
குளிப்பதற்கு நீரில்லை
தவித்து நடக்கின்றன
கூட்டமாய் எருமைகள்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக