வியாழன், 24 ஏப்ரல், 2014

குளவிகள்...!! {சென்ரியு}


*
வண்டுகளின் இம்சை
பொறுக்காமல் முணுமுணுக்கிறது
அன்றலர்ந்த மலர்கள்.
*
வீரத்திற்கு பெருமை சேர்த்தது
வரலாற்று சின்னமாய்
வன்னிப் பூக்கள்.
*
தோப்பில் திருட வந்தவனை
துரத்தி துரத்திக்
கொட்டியது குளவிகள்.
*
ஐந்து ரூபாய் விலை
கோலி குண்டுப் போல
எலுமிச்சம் பழம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக