வெள்ளி, 18 ஏப்ரல், 2014

காந்தி சிரித்தார்...!!

ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள்.
*
தேர்தல் திருவிழாவில்
காணாமல் போனது
உண்மை, நேர்மை, வாய்மை.
*
குற்றச்சாட்டுக்கள் கேட்டார்கள்
தீர்ப்பளிப்பார்கள்
விவேகமான வேட்பாளர்கள்.
*
ஊழல் செய்தவர்களைக்
காரித் துப்புகிறது
சுடுகாட்டுப் பிணங்கள்.
*
வீட்டுக்கு வீடு வாசலில்
கருப்புக் கொடி, தேர்தலைப்
புறக்கணித்ததுக் கிராமம்.
*
வேட்பாளர் சிரித்தார்
வாக்காளர் சிரித்தார்
மறைவில் காந்தி சிரித்தார்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக