திங்கள், 21 ஏப்ரல், 2014

எவருமில்லை அங்கே...!!.


* Na.Ga. Thuraivan's Tamil Senryu.


மழை பெய்து ஒய்ந்தது
மண் ஈரமாக வில்லை
வேட்பாளர்கள் வெற்றிப் பேச்சு.
*
ஊரே அமைதியாகி விட்டது
ஊர் திரும்பி விட்டார்கள்
வேட்பாளர்கள்.
*
எறும்பு போல வரிசையில்
வாக்காளர்கள்
விரலில் “ மை”.
*
வாக்களித்து விட்டு
வெளியில் வந்தேன்
எவருமில்லை அங்கே.
*
விடை பெறுகிறேன்
நண்பர்களே சந்திப்போம்
அடுத்த தேர்தல்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக