வெள்ளி, 25 ஏப்ரல், 2014

கேழ்வரகு கூழ்...!! { சென்ரியு }

கோடை கவிதைகள்.
*
தள்ளு வண்டி அருகில் கூட்டம்
ருசித்துக் குடிக்கிறார்கள்
கேழ்வரகுக் கூழ்.
*
பேரூந்து நிழற் குடையின் கீழ்
படுத்து ஓய்வெடுக்கிறாள்
அனாதைக் கிழவி.
*
அம்மன் தீமிதி விழா
தீச்சூவாலைக் கனிந்திருந்தது
திடீரென வந்தது கோடைமழை.
*
வாலிபர்கள் கிரிக்கெட் விளையாடும்
மைதானமாகி விட்டது
நீரில்லாத ஏரி.
*
மாதம் மும் மாரி
குடிநீர் விநியோகித்து
சாதனைப் புரிகிறது மாநகராட்சி.
*****



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக