திங்கள், 21 ஏப்ரல், 2014

தண்ணீர் யுத்தம்...!!

*
குடிநீரின்றித் தவித்தனர்
சுவாமி தரிசனம் முடித்தவர்கள்
பௌர்ணமி இரவு.
*
சேவை நிறுவனம் அமைத்தத்
தண்ணீர் பந்தலில் நீரின்றி
காலியாக இருக்கிறது பானைகள்.
*
எப்பொழுது வரும் என்று
விழித்திருந்தார்கள் ?
மாநகராட்சி குடிநீர் லாரி.
*
குடிநீர் வருவதில்லை
வருடந் தோறும் தண்டம்
குழாய் இணைப்பு வரி்
*
இப்பொழுது நடப்பது
அணு ஆயுத யுத்தமல்ல
குடி தண்ணீர் யுத்தம்.

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக