திங்கள், 7 ஏப்ரல், 2014

கோடை கவிதைகள் {சென்ரியு}

*
குளிர்ச்சியாக
இருக்கிறது
இளநீர்
*
குண்டு குண்டாக
உருண்டு கிடக்கிறது
பாதையோரம் தர்பூசணி.
*
குளிர்சாதன அறையில் அமர்ந்து
ஒரு மணி நேரமாய்
குடிக்கிறார்கள் தேனீர்.
*
ஹெல்மெட் வழியே
வழிகிறது
துளித் துளியாய் வியர்வை.
*
*
ஒடி வந்து பஸ் ஏறிய
பயணியின் மேல்
எரிந்து விழுந்தார் கண்டக்டர்.
*
விசிறிக் கொண்டே
விற்கிறான்
பனைஒலை விசிறி.
 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக