வியாழன், 17 ஏப்ரல், 2014

கோடைக் கவிதைகள்

வெள்ளரிப் பிஞ்சுகள் { சென்ரியு }
*
கூட்டமாய் இருக்கிறது
குளிர் பானக் கடையில்
சில்லென்று நனைந்த மனம்.
*
தர்பூசணிக்கு
சிறுவன் வைத்தப் பெயர்
“ தொப்பைப் பழம் “.
*
குளிர்ச்சியாகத் தின்ன ஆசை
கையில் வைத்துச் சிரித்தான்
வெள்ளரிப் பிஞ்சுகள்.
*
சித்தப்பாவிற்குப் பிடித்தக்
குளிர்ப் பானம்
நீர்மோர் பானகம்.
*
மனிதன் எப்பொழுதும்
குளிர்ச்சியாக இருப்பதில்லை
குளுமைக் கொடுக்கிறது பழங்கள்.
*



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக