புதன், 30 ஏப்ரல், 2014

ஈச்சங்குலை...!!. { ஹைக்கூ / HAIKU }

Na.Ga, Thuraivan' s HAIKU.
புத்தரிடமிருந்து புத்தம்
என்னுள் ஒளிர்கிறது புத்தம்
விழிப்புணர்வு புத்தம்.
*
அள்ளி எடுத்தேன்
உள்ளங்கை நிறைய
முக்கடல் நீர்.
*
வார்த்தை இலைகள்
மௌனமாய் உதிர்த்தது
பேசாத மரங்கள். 
*
இரவில் பேசுகிறது என்னிடம்
கோடி மைல்களுக்கப்பால் இருந்து
ஒளிரும் நட்சத்திரங்கள்.
*
உலுக்கி எழுப்பியது கனவு
விழித்துப் பார்க்கிறேன்
கேலியாய் சிரிக்கிறது இருட்டு.

***

“ மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.

*
உலக“மே” வியக்கு“மே”
வியர்வைத் துளிகளில்
உதித்தது உழைப்பாளர் தின“மே”.
*
வாழ்த்துவோ “ மே ”.

***

சனி, 26 ஏப்ரல், 2014

அர்த்தநாரி...!! { பரேகு / BAREKU..

சக்தி சிவனுக்குள்
சிவன் சக்திக்குள்
எல்லாமே அணுவுக்குள்…!.
*

*
மாம்பழம் கையில் வைத்து
பால் குடிக்கிறது
அழுகிற குழந்தை.
*
 “ நெருங்கி வராதே ” என்று
வண்ணத்துப்பூச்சிக்கு
கையசைக்கிறது மலர்கள்.
*
மனம் குளிர்ந்ததோ?
மௌனமாய் சிரிக்கிறான்
அபிஷேகப் பிரியன் சிவன்.
*
சிறகை உதிர்த்துப் போனது
அடையாளத்திற்காக
இணையைத் தேடிய பறவை.
***




வெள்ளி, 25 ஏப்ரல், 2014

கேழ்வரகு கூழ்...!! { சென்ரியு }

கோடை கவிதைகள்.
*
தள்ளு வண்டி அருகில் கூட்டம்
ருசித்துக் குடிக்கிறார்கள்
கேழ்வரகுக் கூழ்.
*
பேரூந்து நிழற் குடையின் கீழ்
படுத்து ஓய்வெடுக்கிறாள்
அனாதைக் கிழவி.
*
அம்மன் தீமிதி விழா
தீச்சூவாலைக் கனிந்திருந்தது
திடீரென வந்தது கோடைமழை.
*
வாலிபர்கள் கிரிக்கெட் விளையாடும்
மைதானமாகி விட்டது
நீரில்லாத ஏரி.
*
மாதம் மும் மாரி
குடிநீர் விநியோகித்து
சாதனைப் புரிகிறது மாநகராட்சி.
*****



வியாழன், 24 ஏப்ரல், 2014

குளவிகள்...!! {சென்ரியு}


*
வண்டுகளின் இம்சை
பொறுக்காமல் முணுமுணுக்கிறது
அன்றலர்ந்த மலர்கள்.
*
வீரத்திற்கு பெருமை சேர்த்தது
வரலாற்று சின்னமாய்
வன்னிப் பூக்கள்.
*
தோப்பில் திருட வந்தவனை
துரத்தி துரத்திக்
கொட்டியது குளவிகள்.
*
ஐந்து ரூபாய் விலை
கோலி குண்டுப் போல
எலுமிச்சம் பழம்.



புதன், 23 ஏப்ரல், 2014

இங்கிதமான...!! { ஹைபுன் }

NA. GA, THURAIVAN'S HAIBUN.
*
உறவுக்காரங்க வீட்டுக்குப் போனா, பூ, பழம், மிக்சர்
வாங்கிட்டுப் போகணும். நோயாளியைப் பார்க்க
மருத்துவமனைக்குப் போனா, பழம், பூஸ்ட், ஆர்லிக்ஸ்
வாங்கிட்டுப் போகணும். துக்கம் விசாரிக்க சாவு வீட்டுக்குப்
போனா, மாலை வாங்கிட்டுப் போகணும். எங்கே போனாலும்
சம்பிரதாயமாக ஏதேனும் ஒன்றை வாங்கிப் போனால் அந்த
மரியாதையே தனி.
*
இங்கிதமான வரவேற்பு
இங்கிதமான விசாரிப்பு
இங்கிதமான உபசரிப்பு.

*** 

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

பந்து { முலாம் } பழம்...!! { சென்ரியு }

SUMMER SENRYU.
*
மனமோ வக்ரமாய்
வெளியில் தெரிவதில்லை
மாம்பழத்தில் வண்டு.
*
மண் குளிர்ந்தது
வெப்ப சலன மழை
மரங்கள் சிரித்தன.
*
விளையாட முடியாது
குண்டு குண்டான
பந்து {முலாம்} பழம்.

*
தள்ளு வண்டி நிறைய
மண்ணுளிப் பாம்புகளாய்
குளிர்ந்தக் கீரைக்காய்கள்.
*
சுகந்தமணம் குளிர்ச்சியானது
நரம்புக்கு வலிமை தருவது
நாட்டு மருந்து நன்னாரி சர்பத்.

*** 

திங்கள், 21 ஏப்ரல், 2014

முதியோர் வாழ்க...!! { கட்டுரை }


*
Tamil Essay
*
முதுமைக் காலத்தை, முதியோர் பூரணமாக உணர்ந்து
அனுபவித்து தன் இறுதி நாட்களைக் கழித்து வர வேண்டி
இருக்கிறது. அவ்வப்போது ஏற்படும் இன்பத் துன்பங்களைக்
கடந்து, உறவுகள் வெறுக்கும் சூழலைக் கடந்து முன்னேற
வேண்டியிருக்கிறது. முதியோர்களின் உள்ளக் கிடங்கில்
எத்தனை எத்தனையோ மனச் சுமைப் புதையல்கள் மண்டிக்
கிடக்கின்றன. அவைகளையெல்லாம் மறந்து கொஞ்சமேனும்
முதியோர் குறித்த செய்திகள். விவரங்கள், நல்ல இலக்கியங்கள்
படித்தறிந்து மன ஆறுதல் பெற்று வாழ்ந்திடல் அவசியம்.
முதுமை, வாழ்வில் நாம் வாழ்ந்துக் கழித்த நாட்களின் வளமை
யான இறுதி பருவக் காலமாகும்.
*
இன்றைய, தமிழ் ஹைக்கூக் கவிதைகளில், முதியோர்களைப்
பற்றி கவிஞர்கள் எவ்வாறெல்லாம் சிந்திக்கிறார்கள், சித்தரிக்
கிறார்கள் என்பதனைச் சற்றுப் பார்ப்போமா?    
*
இளமையில், வாலிபத்தில் உடலின் ரோமங்கள் மிகக் கருப்பாகிப்
பளபளப்பாக மின்னும் அதே நேரத்தில் வயது ஏற ஏற கருப்பு
நிறம் மெல்ல மெல்ல மாறி வெண்மைப் படரத் துவங்கும்.
அதையே வெண்நரை என்கிறோம். ஆக, நிறங்களே வயதினை
உணர்த்துகின்றன என்பதை கவிஞர். ந.க. துறைவன் தன்
ஹைக்கூக் கவிதையில் இப்படிச் சொல்கிறார்
    இளமையில் கருமை
    முதுமையில் வெண்நரை
    வயதினை உணர்த்தும் வண்ணங்கள். {உப்பு பொம்மைகள்-நூல்}
                                           பக்கம் – 12.
ஒரு மரத்தின் வயதினை எத்தனை ஆண்டுகள் என்று கணக்கிடுவது
மிகச் சிரமமானதேயாகும். அதைத் தோராயமாகத் தான் மதிப்பிடுவர்
தாவரவியல் வல்லுநர்கள். அம்மரத்தின் இலைகள் பருவக் காலத்தில
பழுத்து பொன்னிறமாக பூமியில் உதிர்க்கும். அவைகள் பார்ப்பதற்கு
ரொம்ப அழகாகவிருக்கும். அதனையே சருகுகள் என்கிறோம். அச்
சருகுகளை முதுமைக் கவிதைகள் என்று வர்ணிக்கிறார் கவிஞர்.
மித்ரா. 
காலம் எழுதும்
முதுமைக் கவிதைகள்
சருகுகள்.            { மித்ரா – புல் நுனி வைரங்கள்-
                      நூல் – பக்கம் – 159 }



சருகுகள் போன்று இம்மனித உடல் இறுதியில் பூமியில் உதிர்ந்து
விடுகின்றன. என்பதை உணர்த்துகின்ற அழகியல் ஹைக்கூவாகத்
திகழ்கிறது.
*
எந்தவொரு சங்கதியையும் நல்லதாகப் பார்ப்பது என்பது நேர்மையான
சிந்தனையாகும். சில நேரங்களில் முரணாகத் தீய எண்ணங்களை
மனம் தோற்றுவிக்கும். புத்தாண்டு தினத்தில் தன் வயதான
காலத்தில் அவருக்கு இப்படித் தோன்றுகிறது.
       அது நல்லது இதுவும் நல்லது     
       புத்தாண்டு தினம்
       என் வயதான காலத்தில்
-    ரையாட்மோ.
தமிழில்: பரிமளம்சுந்தர்- ” கசிகிறது மழைநீர் ”
என்ற நூல் – பக்கம் – 10.

ரையாட்டோவின் இந்த ஜப்பானிய ஹைக்கூ பலப்பலப்
பரிமாணங்களில் சிந்திக்க வைக்கிறது என்பதை அறியலாம்..
*
பொம்மைகளில் முக அழகு செய்கையாக இருந்தாலும்,
பார்ப்பதற்கு ரசிக்கவே தோன்றுமல்லவா! குழந்தைகள் விரும்பி
விளையாடும் பொம்மைகளுக்கு முதுமை என்பதில்லை. அவைகள்
வயதானவைகள் என்று யாரும் உத்தேசிப்பதில்லை. பிள்ளைப்
பருவம் முதல் பல்வேறு தோற்றங்களில் வடிவமைக்கப்படும்.
அவ்வவ் வடிவங்களிலே பார்த்துக் களித்து இன்புறலாம்.. இருப்பினும்
அவைகளை விட நான். முதுமையடைந்து விட்டேன் என்று
பறைசாற்றுகின்றார் செய்பூ என்ற ஜப்பானியக் கவிஞர்.
     பொம்மைகளின் முகங்கள்
     நான் ஒரு போதும் உத்தேசிக்கவில்லை
     என்றாலும் முதுமையடைந்து விட்டேன்.
-    - செய்பூ.
-    - தமிழில் “ பரிமளம்சுந்தர். மேலது-பக்கம்-22..
நான் முதுமையடைந்து விட்டேன் என்ற ஜப்பானிய கவிஞரின்
பெருமிதம் போன்று, ஒவ்வொரு மனிதரிடம் இருக்க வேண்டியது
அவசியமாகும். இயற்கை மனிதனுக்குக் கொடுத்தச் சிறந்த பரிசே
முதுமையாகும். முதியோர்களாகிய நம்மில் ஒவ்வொருவரும்
தனது உடலைப் பேணிப் பாதுகாத்து பிரச்சனைகளின்றி அமைதியாய்,
ஆரோ்க்கியமாய் வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள
வேண்டும். நூறாண்டு வாழ்வதற்கான மருத்துவர்கள் கூறும்
ஆலோசனைகளைக் கவனத்தில் வைத்துக் கடைப்பிடிக்க வேண்டும்.
முதியோர்களை அவமதிக்கும் புல்லர்களின் செயல்களை வென்று,
இச்கமூகத்தில் இந்திய உயர்குடிமகன் என்ற உன்னதநிலை எட்டி,
ஏற்றமுடன் வாழ்ந்துக் காட்டுவோம்…!!.
*
அன்புடன்
ந.க. துறைவன்
வேலூர் – 632 009.
செல் :- 9442234822 / 8903905822

  
     
-                                         







.

 *
முதியோர் வாழ்க…!! { கட்டுரை }
*
Tamil Essay
*
முதுமைக் காலத்தை, முதியோர் பூரணமாக உணர்ந்து
அனுபவித்து தன் இறுதி நாட்களைக் கழித்து வர வேண்டி
இருக்கிறது. அவ்வப்போது ஏற்படும் இன்பத் துன்பங்களைக்
கடந்து, உறவுகள் வெறுக்கும் சூழலைக் கடந்து முன்னேற
வேண்டியிருக்கிறது. முதியோர்களின் உள்ளக் கிடங்கில்
எத்தனை எத்தனையோ மனச் சுமைப் புதையல்கள் மண்டிக்
கிடக்கின்றன. அவைகளையெல்லாம் மறந்து கொஞ்சமேனும்
முதியோர் குறித்த செய்திகள். விவரங்கள், நல்ல இலக்கியங்கள்
படித்தறிந்து மன ஆறுதல் பெற்று வாழ்ந்திடல் அவசியம்.
முதுமை, வாழ்வில் நாம் வாழ்ந்துக் கழித்த நாட்களின் வளமை
யான இறுதி பருவக் காலமாகும்.
*
இன்றைய, தமிழ் ஹைக்கூக் கவிதைகளில், முதியோர்களைப்
பற்றி கவிஞர்கள் எவ்வாறெல்லாம் சிந்திக்கிறார்கள், சித்தரிக்
கிறார்கள் என்பதனைச் சற்றுப் பார்ப்போமா?    
*
இளமையில், வாலிபத்தில் உடலின் ரோமங்கள் மிகக் கருப்பாகிப்
பளபளப்பாக மின்னும் அதே நேரத்தில் வயது ஏற ஏற கருப்பு
நிறம் மெல்ல மெல்ல மாறி வெண்மைப் படரத் துவங்கும்.
அதையே வெண்நரை என்கிறோம். ஆக, நிறங்களே வயதினை
உணர்த்துகின்றன என்பதை கவிஞர். ந.க. துறைவன் தன்
ஹைக்கூக் கவிதையில் இப்படிச் சொல்கிறார்
    இளமையில் கருமை
    முதுமையில் வெண்நரை
    வயதினை உணர்த்தும் வண்ணங்கள். {உப்பு பொம்மைகள்-நூல்}
                                           பக்கம் – 12.
ஒரு மரத்தின் வயதினை எத்தனை ஆண்டுகள் என்று கணக்கிடுவது
மிகச் சிரமமானதேயாகும். அதைத் தோராயமாகத் தான் மதிப்பிடுவர்
தாவரவியல் வல்லுநர்கள். அம்மரத்தின் இலைகள் பருவக் காலத்தில
பழுத்து பொன்னிறமாக பூமியில் உதிர்க்கும். அவைகள் பார்ப்பதற்கு
ரொம்ப அழகாகவிருக்கும். அதனையே சருகுகள் என்கிறோம். அச்
சருகுகளை முதுமைக் கவிதைகள் என்று வர்ணிக்கிறார் கவிஞர்.
மித்ரா. 
காலம் எழுதும்
முதுமைக் கவிதைகள்
சருகுகள்.            { மித்ரா – புல் நுனி வைரங்கள்-
                      நூல் – பக்கம் – 159 }



சருகுகள் போன்று இம்மனித உடல் இறுதியில் பூமியில் உதிர்ந்து
விடுகின்றன. என்பதை உணர்த்துகின்ற அழகியல் ஹைக்கூவாகத்
திகழ்கிறது.
*
எந்தவொரு சங்கதியையும் நல்லதாகப் பார்ப்பது என்பது நேர்மையான
சிந்தனையாகும். சில நேரங்களில் முரணாகத் தீய எண்ணங்களை
மனம் தோற்றுவிக்கும். புத்தாண்டு தினத்தில் தன் வயதான
காலத்தில் அவருக்கு இப்படித் தோன்றுகிறது.
       அது நல்லது இதுவும் நல்லது     
       புத்தாண்டு தினம்
       என் வயதான காலத்தில்
-    ரையாட்மோ.
தமிழில்: பரிமளம்சுந்தர்- ” கசிகிறது மழைநீர் ”
என்ற நூல் – பக்கம் – 10.

ரையாட்டோவின் இந்த ஜப்பானிய ஹைக்கூ பலப்பலப்
பரிமாணங்களில் சிந்திக்க வைக்கிறது என்பதை அறியலாம்..
*
பொம்மைகளில் முக அழகு செய்கையாக இருந்தாலும்,
பார்ப்பதற்கு ரசிக்கவே தோன்றுமல்லவா! குழந்தைகள் விரும்பி
விளையாடும் பொம்மைகளுக்கு முதுமை என்பதில்லை. அவைகள்
வயதானவைகள் என்று யாரும் உத்தேசிப்பதில்லை. பிள்ளைப்
பருவம் முதல் பல்வேறு தோற்றங்களில் வடிவமைக்கப்படும்.
அவ்வவ் வடிவங்களிலே பார்த்துக் களித்து இன்புறலாம்.. இருப்பினும்
அவைகளை விட நான். முதுமையடைந்து விட்டேன் என்று
பறைசாற்றுகின்றார் செய்பூ என்ற ஜப்பானியக் கவிஞர்.
     பொம்மைகளின் முகங்கள்
     நான் ஒரு போதும் உத்தேசிக்கவில்லை
     என்றாலும் முதுமையடைந்து விட்டேன்.
-    - செய்பூ.
-    - தமிழில் “ பரிமளம்சுந்தர். மேலது-பக்கம்-22..
நான் முதுமையடைந்து விட்டேன் என்ற ஜப்பானிய கவிஞரின்
பெருமிதம் போன்று, ஒவ்வொரு மனிதரிடம் இருக்க வேண்டியது
அவசியமாகும். இயற்கை மனிதனுக்குக் கொடுத்தச் சிறந்த பரிசே
முதுமையாகும். முதியோர்களாகிய நம்மில் ஒவ்வொருவரும்
தனது உடலைப் பேணிப் பாதுகாத்து பிரச்சனைகளின்றி அமைதியாய்,
ஆரோ்க்கியமாய் வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள
வேண்டும். நூறாண்டு வாழ்வதற்கான மருத்துவர்கள் கூறும்
ஆலோசனைகளைக் கவனத்தில் வைத்துக் கடைப்பிடிக்க வேண்டும்.
முதியோர்களை அவமதிக்கும் புல்லர்களின் செயல்களை வென்று,
இச்கமூகத்தில் இந்திய உயர்குடிமகன் என்ற உன்னதநிலை எட்டி,
ஏற்றமுடன் வாழ்ந்துக் காட்டுவோம்…!!.
*
அன்புடன்
ந.க. துறைவன்
வேலூர் – 632 009.
செல் :- 9442234822 / 8903905822

  
     
-                                         







.

எவருமில்லை அங்கே...!!.


* Na.Ga. Thuraivan's Tamil Senryu.


மழை பெய்து ஒய்ந்தது
மண் ஈரமாக வில்லை
வேட்பாளர்கள் வெற்றிப் பேச்சு.
*
ஊரே அமைதியாகி விட்டது
ஊர் திரும்பி விட்டார்கள்
வேட்பாளர்கள்.
*
எறும்பு போல வரிசையில்
வாக்காளர்கள்
விரலில் “ மை”.
*
வாக்களித்து விட்டு
வெளியில் வந்தேன்
எவருமில்லை அங்கே.
*
விடை பெறுகிறேன்
நண்பர்களே சந்திப்போம்
அடுத்த தேர்தல்.

*

தண்ணீர் யுத்தம்...!!

*
குடிநீரின்றித் தவித்தனர்
சுவாமி தரிசனம் முடித்தவர்கள்
பௌர்ணமி இரவு.
*
சேவை நிறுவனம் அமைத்தத்
தண்ணீர் பந்தலில் நீரின்றி
காலியாக இருக்கிறது பானைகள்.
*
எப்பொழுது வரும் என்று
விழித்திருந்தார்கள் ?
மாநகராட்சி குடிநீர் லாரி.
*
குடிநீர் வருவதில்லை
வருடந் தோறும் தண்டம்
குழாய் இணைப்பு வரி்
*
இப்பொழுது நடப்பது
அணு ஆயுத யுத்தமல்ல
குடி தண்ணீர் யுத்தம்.

***

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

காந்தி சிரித்தார்...!!

ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள்.
*
தேர்தல் திருவிழாவில்
காணாமல் போனது
உண்மை, நேர்மை, வாய்மை.
*
குற்றச்சாட்டுக்கள் கேட்டார்கள்
தீர்ப்பளிப்பார்கள்
விவேகமான வேட்பாளர்கள்.
*
ஊழல் செய்தவர்களைக்
காரித் துப்புகிறது
சுடுகாட்டுப் பிணங்கள்.
*
வீட்டுக்கு வீடு வாசலில்
கருப்புக் கொடி, தேர்தலைப்
புறக்கணித்ததுக் கிராமம்.
*
வேட்பாளர் சிரித்தார்
வாக்காளர் சிரித்தார்
மறைவில் காந்தி சிரித்தார்.

*

வியாழன், 17 ஏப்ரல், 2014

கோடைக் கவிதைகள்

வெள்ளரிப் பிஞ்சுகள் { சென்ரியு }
*
கூட்டமாய் இருக்கிறது
குளிர் பானக் கடையில்
சில்லென்று நனைந்த மனம்.
*
தர்பூசணிக்கு
சிறுவன் வைத்தப் பெயர்
“ தொப்பைப் பழம் “.
*
குளிர்ச்சியாகத் தின்ன ஆசை
கையில் வைத்துச் சிரித்தான்
வெள்ளரிப் பிஞ்சுகள்.
*
சித்தப்பாவிற்குப் பிடித்தக்
குளிர்ப் பானம்
நீர்மோர் பானகம்.
*
மனிதன் எப்பொழுதும்
குளிர்ச்சியாக இருப்பதில்லை
குளுமைக் கொடுக்கிறது பழங்கள்.
*



புதன், 16 ஏப்ரல், 2014

ந.க. துறைவன் ஹைபுன் கவிதை.

தரை இறங்கும் ஹெலிகேப்டர்…! {ஹைபுன் }
*
ஆரத்தி எடுத்தப் பெண்கள்
ஆக்ரோஷமாய் கத்தினார்கள்
பணம் பட்டுவாடா தகராறு.
*
புதுசா என்ன இலவசம்?
அறிவிப்பு வருமென்று
எதிர்பார்த்தார்கள் ஏழைகள்.
*
ஹெலிகேப்டர் இறங்க இறங்க
தலைஎணங்கி நிற்கிறார்கள்
தன்மானத் தமிழர்கள்.
*
சின்னங்களை வரவழைத்து
மாஜிக் காட்டினான்
வியந்துப் பார்க்கிறது கூட்டம்.
*
இந்திய வாக்காளர் பட்டியல்
சிறந்தத் தொகுப்பாக
கின்னஸ் தேர்வு.
*


அலைந்தபடியே இன்றும்...!! {ஹைபுன் }


*
ஆடு மாடுகள் மற்றும் விலங்கினங்கள் மேய்வதற்கு
விளைநிலங்கள் குறைந்து விட்டன. நீர்நிலைகள்
காணாமலேயே போய்விட்டன. குளங்கள் தூர்ந்து
மறைந்து விட்டன ஆறுகள் வறண்டு காணப்படுகின்றன
கிராமங்களில் மாடுகள் வளர்ப்பவர்கள் மலிந்து
விட்டார்கள். நகரங்களில் மாடுகள் வீதிகளில் தான்
மேய்ந்துக் காணப்படுகின்றன. சில நேரங்களில்
போக்குவரத்தையே ஸ்தம்பிபக்க வைக்கும் ஜீவராசிகள்
எல்லாம் நீர்நிலைகளைத் தேடித் தேடி அலைந்தபடியே
இன்னும்….!!.
*
வறட்சி நிலை
விவசாயம் முடங்கி விட்டது
நோயில் நீரில்லா நிலங்கள்.
*


திங்கள், 14 ஏப்ரல், 2014

அழகான தும்பிகள்...!!

*
அவசரமாகப் பறக்கின்றன
ராணுவ ஹெலிகேப்டர்கள்
அழகானத் தும்பிகள்.
*
நிமிர்ந்துப் பார்த்து விட்டது
தோழியைத் தேடி ஒடுகிறது
வேலி தாண்டி ஓணான்.
*
விரும்பி வாங்கினார் விலைக்கு
தாயிடமிருந்துப் பிரித்து
புசுபுசுப் பூனைக் குட்டி.
*
முகம் அறியாத நண்பர்கள்
சந்தோஷமாகப் பேசிக் கொண்டனர்
கோயில் வாசலில் காலணிகள்.

*

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

" ஜய " தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


*
ஜய ஜயமென
ஜயமாகி வருக
ஜய வருடமே…!!
*
ஜயமாகி ஜயிக்க
ஜயமெனக்கு தருக
ஜய வருடமே…!!
*
ஜயமென ஜபிப்போர்க்கு
ஜயமளிக்க வருக
ஜய வருடமே…!!
*
ஜயமென ஜகமெலாம்
ஜய ஜய வென்று வெல்க
ஜய வருடமே…!!
*
ஜயமென அன்பு பெருக
ஜயமென கருணை பொழிக
ஜய வருடமே…!!
*
ஜயமென தனம் பெருக
ஜயமென நலம்  தருக
ஜய வருடமே வருக….வருக…!!
*
அன்புடன்,
ந.க. துறைவன்
பிளாட் எண்: 20,
வசந்தம் நகர் விரிவு,
பேஸ்—3, சத்துவாச்சாரி,
வேலூர்—632 009.
செல் :- 9442234822 / 8903905822.

  

 


பெருங்கள்வன் { பரேகு கவிதை }

குடும்பஸ்தன் உள்ளத்தில் துறவு
ஞானியின் உள்ளத்தில காமம்
உள்ளம் ஒரு பெருங் கள்வன்.
*
நெருங்கி உரசிக் கொண்டன
சிக்கி முக்கிக் கற்கள்
பிறந்தது காதல் 
*
“ மணியாட்டிக்கிட்டு
எங்கடா போறே “ என்றாள் கிழவி
தெருவில் நிர்வாணச் சிறுவன்.

*

சனி, 12 ஏப்ரல், 2014

கோடை கவிதைகள்.

புங்க இலை மறைப்பில்
குளிர்ச்சியா யிருக்கிறது
கூடை நிறைய  நுங்கு
*
பதனீர் விற்பவள்
முகத்தில் வழிகிறது
முத்து முத்தாய் வியர்வை.
*
அரைமணிக் கொரு தரம்
குளிக்க வைக்கிறாள்
சலித்துக் கொள்கிறது பூக்கள்.
*
கோடை வெப்பம்
வாய்க்கால் நீரில்
குளிக்கின்றன வாத்துக்கள்.
*
குளிப்பதற்கு நீரில்லை
தவித்து நடக்கின்றன
கூட்டமாய் எருமைகள்.

*