வியாழன், 29 ஜனவரி, 2015

ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.



*
N.G. THURAIVAN’S HAIKU.
TAMIL / ENGLISH.
*
கர்ப்பக்கிரகத்துள் மூலவர்
சுவரிலோ
சி்ற்பியின் பாலியல்.
Sanctum sanctorum-
At the corridors,
Sex appeats of the sculptor!
*
தனிமை நிலவு
வீதியில் காவல்
நடுநிசி நாய்கள்.
Solitary moon
to guard the streets
midnight dogs.
*
அண்மைக் காலமாய்
அருகிப் போனது
சிரிப்பின் அற்புத கணப்பொழுது.
Nowadays – the pleasant
moments of laughter
becoming almost a rarity!.
*
நிரம்பி வழியும் ஏரி
துணிச்சலான சவாரி
சருகு இலைப் படகுகள்.
Lake overflows….
on expedition, the boats,
with withered leaves!.
*
சாபமா கோபமா
வானம் பார்த்த பூமியில்
பொழிவதில்லை மேகம்.
Fury or a curse?
Clouds, heedless
Of the drought – prone soil!.
*
சஞ்சல மனத்திற்கு
சஞ்சீவி மருந்து
மோன மௌனம்.  
A panacea
For a waverly mind
Silent composure.
*
மடியில் உறங்கும் குழந்தை
அம்மாவின் வயிற்றில் துள்ளும்
இன்னொரு குழந்தை.
On mother”s lap
a child asleep whilst
a foetus nudging at womb!
*
தமிழ் : ந.க. துறைவன்
Tamil : N.G. THUAIVAN.  
ஆங்கிலம் : கவிஞர். அமரன்.
Eng .Translated by : Kavingzhar. AMARAN. 
நன்றி :- “ மகாகவி ” – டிசம்பர்- 2014. இதழில்
வெளிவந்துள்ளது.

*

செவ்வாய், 27 ஜனவரி, 2015

குணமறிந்து...!! [ ஹைக்கூ ]

*
N.G. THURAIVAN'S HAIKU.

கோள் சொல்லத் தெரியாது
அவமானப்படுத்தத் தெரியாது
அமைதியான சிட்டுக் குருவிகள்
*
வழி தவறிப் போகிறதென்று
விசனப்பட்டான்.
சரியாகப் பறக்கின்றன பறவைகள்.
*
அறிவுரைச் சொல்வதற்கும்
நேர்மையான மனம் தேவை
எந்தப் புற்றில் நல்ல பாம்பு?

*

அனுசரிப்பு...!! [ ஹைபுன் ]

*
N.G. THURAIVAN'S HAIBUN.
*
திருமணமானப் பெண்கள், கணவனுடன் எப்பொழுதேனும் சந்தோஷமாக மனம் விட்டுப் பேசும்போது, அடிக்கடி அம்மா வீட்டின் வசதி வாய்ப்புகள், அங்கு எப்படியெல்லாம் நடப்பார்கள். பேசிப் பழகுவார்கள் என்று பெருமையோடுப் பேசித் தீர்ப்பாள். அவ்வாறு பேசுவதை எல்லா கணவன்மார்களும் கேட்டுக் கொள்வார்கள் என்று சொல்வதற்கில்லை. சில பேருக்குப் பிடிக்கும். சில பேருக்குப் பிடிக்காது. சில பேர்களிடையே சண்டைச் சச்சரவும் ஏற்பட்டு விடுவதுண்டு. இத் தற்பெருமையினால் விவாகரத்துமானதுண்டு. தற்கொலை வரைப்  போய் வாழ்வே
முடிந்துக் கொண்டப் பெண்களும் உண்டு.          
அனுசரிப்பில்லாத இருமனங்கள்
சட்டெனப் பற்றி விடுகிறது
வார்த்தை நெருப்புப் பொறி.
*

வெள்ளி, 23 ஜனவரி, 2015

சுண்டெலி....!! [ சென்ரியு ]

*
N.G. THURAIVAN'S SENRYU. 
*
தொப்பை விநாயகரைச்
சிரித்துக் கொண்டே
சுமந்துப் போகிறது சுண்டெலி.
*
பேசிக் கொள்ளாதப் பக்கத்து வீட்டுக்கார்கள்
பொங்கல் வாழ்த்துக்கள் - என்று
தெருவில் போட்டார்கள் கலர்கோலம்.
*
வெண்புகைப் படலம் எங்கும்
கடுமையான பனி
வெளிவரவில்லைப் பறவைகள்

*

வியாழன், 22 ஜனவரி, 2015

மீன்கள்..!! [ ஹைக்கூ ]

*
N.G. THURAIVAN'S HAIKU.
*
மீனின் இதயத்தைக்
குத்திக் கொல்கின்றது
தூண்டில் கொக்கியின் நுனி.
*
தூண்டில்காரனை ஏமாற்றி விட்டு
துள்ளி குதித்துத்
தப்பித்துப் போகின்றன மீன்கள்.
*
வயது என்னவாக இருக்கும்?
வெட்டுப்பட்டுப் கொண்டிருக்கும்
வலிமையான பெரிய மீன்.
*

புதன், 21 ஜனவரி, 2015

நடைப் பயிற்சி...!! [ சென்ரியு ]

*
N.G. THURAIVAN'S SENRYU.
*
பயமா என்ன?
உருகி மறைகின்றான்
சூரியனைக் கண்ட பனி.
*
இதமான காலைக் காற்று
புல்வெளி, குளிர்ப் பனி
நடைபயிற்சியில் நாய்கள்.
*
அஞசறைப் பெட்டியில்
அடங்கியிருக்கின்றது
நாட்டு வைத்தியம்.
*

அசைவு...!! [ ஹைக்கூ ]

*
மரங்களின் அசைவாய்
மனமெங்கோ அலைகிறது
இரவு நேரம்.
*

செவ்வாய், 20 ஜனவரி, 2015

பென்குவின்...!! [ ஹைக்கூ ]

*
N.G. THURAIVAN'S HAIKU.
*
காண்போர் இல்லாத இடத்தில்
ஆனந்த நடனமாடி மகிழ்கின்றது
பென்குவின் பறவைகள்.
*
பாதையில் போகிறது நரி
புதரில் ஒளிந்துப் பார்க்கிறது
அறிவாளி முயல்.

வியாழன், 15 ஜனவரி, 2015

மஞ்சள் வெயில்...!! [ ஹைக்கூ ]

*
N.G. THURAIVAN'S HAIKU.
*
எந்த விபத்தும் நடக்கவில்லை
சூரியன் வாரி இறைக்கிறான்
மாலை மஞ்சள் வெயில்.
*
பளபளப்பான மென்மை உணர்கிறான்
கைகவிரல்களில் கனவு
வண்ணத்துப் பூச்சியின் இறகு.
*

நல்வாழ்த்துக்கள்...!!

*
GOOD MORNING FRIEND’S
மாட்டுப் பொங்கல் நாள்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நண்பர்களே..
அன்பு காலை வணக்கம்
வாழ்க வளமுடன்…

*

நூல் அறிமுகம்...!!

*
ந.க. துறைவனின் “ தவளை குதித்த குளம் ”
ஹைக்கூ கவிதை நூல் வெளிவந்து விட்டது.
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஸ்டால்

எண் 419 – ல் விற்பனைக்கு கிடைக்கின்றன. 

புதன், 14 ஜனவரி, 2015

நல்வாழ்த்துக்கள்...!!

*
உலகத் தமிழர்கள் அனைவருக்கும்
எனது அன்பான பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்…

*

திங்கள், 12 ஜனவரி, 2015

கோமாளி பொம்மை...!! [ ஹைக்கூ }

*
N.G. THURAIVAN'S HAIKU.
*
கீழே உதிர்ந்துக் கிடந்தது
கிளிகள் கொத்தி கொத்தி
எச்சில் படுத்திய இலந்தம்பழம்.
*
கோமாளி பொம்மை மேல்
எச்சமிட்டு பறக்கிறது
ரசிக்கத் தெரியாத காக்கை.
*
மனிதர்களை வேடிக்கைப் பார்க்கவா?
ஊருக்குள் வருகின்றன
காட்டு யானைகள்.
*

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

சென்னை புத்தகக் கண்காட்சி...!!

*
சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன்.
கூட்டமோ கூட்டம். புத்தகம் நோட்டமிடும் கூட்டம்.
கண்களால் வாங்கியது லட்சம் புத்தகம்
காசு கொடுத்து வாங்கியது பத்துப் புத்தகம்.
எழுத்தாளர் நண்பர்கள் சிலரைச் சந்தித்தேன்.
மாலை வீடு திரும்பினேன்.

*

செவ்வாய், 6 ஜனவரி, 2015

கோமாளி பொம்மை....!! [ ஹைக்கூ ]

*
N,G. THURAIVAN'S HAIKU.
*
கீழே உதிர்ந்துக் கிடந்தது
கிளிகள் கொத்தி கொத்தி
எச்சில் படுத்திய இலந்தம்பழம்.
*
கோமாளி பொம்மை மேல்
எச்சமிட்டு பறக்கிறது
ரசிக்கத் தெரியாத காக்கை.
*
மனிதர்களை வேடிக்கைப் பார்க்கவா?
ஊருக்குள் வருகின்றன
காட்டு யானைகள்.
*

சனி, 3 ஜனவரி, 2015

கிறுக்கன்....!! [ ஹைக்கூ ]

*
N.G. THURAIVAN'S HAIKU>
*
கண்ணாடிப் பெட்டிக்குள்
நீர்க் காற்றில்
அசைவற்ற பூச்செடிகள்.
*
சுவையான அப்பம்
சூழ்ந்து தின்கின்றன மீன்கள்
குளத்தில் நிலா.
*
பேண்ட் சர்ட் அணிந்த கிறுக்கன்
வயற்காட்டில்
காவல் பொம்மை.

*