வியாழன், 30 ஜூலை, 2015

வெட்கம்

எப்படித் தெரியும்?
முகத்தில்
வெட்கங் கெட்ட வெட்கம்.


பாரம்...!! [ சென்ரியு ]

*
முன் பாரம் .இல்லை
பின் பாரம் இல்லை
வயிற்றில் பாரம்.
*

திங்கள், 27 ஜூலை, 2015

அஞ்சலி கவிதை.

ஜனாதிபதி ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் கவிதை.
*
ஒ! மனிதா,
எனது படைப்பில் சிறந்தவனே!
உனது வாழ்வு நிற்காத நீண்ட பயணம்!
அதில் மாந்தர் அனைவரும் இணையும் வரை
மற்றவர் சுகத்தில்
மற்றவர் துயரத்தில்
மனதார மூழகுங்கள்
எனது வடிவான பேரானந்தம்
உன்னுள் பிறக்கும்
அதுதான் மனிதத்தின் அழியாத அடையாளம்.
வாழ்வின் பாதையில்
தினமும் உங்களுக்குத் திகட்டும் வரை பாடம்.
அதனாலேயே
நீங்கள் தாம்
எனது படைப்பில் சிறந்த படைப்பு.
*
ஆதாரம் ;- எழுச்சி தீபங்கள் – நூல் – பக்கம் – 26.

*

அஞ்சலி...!!


*
கனவுச் சிறகுகளை விரித்துப் பறந்த
அக்னி சிறகுப் பறப்பதை நிறுத்திக் கொண்டது
*.
மறைந்த முன்னாள் ஜானாதிபதி
டாக்டர்.ஆ.பெ.ஜெ. அப்துல்கலாம் அவர்களின்
மறைவிற்கு எனது ஆழந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
*

ஞாயிறு, 26 ஜூலை, 2015

நொடி

எனக்குச் சொந்தமானது
இந்த நொடி மட்டுமே
கடந்து சென்ற நொடியல்ல.
*


வெள்ளி, 24 ஜூலை, 2015

குறும்பு...!!

படித்துக் கொண்டிருந்தவனைக்
கடித்து விட்டுப் போகிறது
குறும்பு எறும்பு.


மிளகு

உதட்டின் நுனியில்
மிளகு
கருமச்சம்


ஞாயிறு, 19 ஜூலை, 2015

நிழல்

அசையாமல் இருக்கிறது
மரத்தின் கீழ்
அவள் நிழல்.
ந.க.துறைவன்.


பயிற்சி

காலை நடை பயிற்சி
மாலை உடற் பயிற்சி
எல்லாமே ஆரோக்கிய முயற்சி.
*


வியாழன், 16 ஜூலை, 2015

ஆதாயம்...!! [ லிமரைக்கூ / டimaraiku /


*
மனிதப் பிறப்பே இங்கொரு சாபம்
உயிர்களைப் பலி கொள்கின்றன
ஊழல் தேர்வு நிறுவனம் வியாபம்
*
குடிக்கப் பழக்கி விடுகின்றார்கள் சாராயம்
இளம்சந்ததிகளின் வாழ்வைப் பாழ்படுத்திக்
கஜானாவை நிரப்பத் தேடுகிறது அரசு ஆதாயம்

*

மரங்க்ள்...!! [ ஹைக்கூ ]

*
இயற்கைக் கொடுத்த நன்கொடை
பூக்கள் பழங்கள் நிறைந்தது

அழகான மரங்கள்.

வருங்காலம்...!! [ ஹைக்கூ ]

*
வருங்காலம் எப்படியிருக்கும்?
கைரேகைப் பார்ப்பதில்லை
பசுமையான இலைகள்.

*                                  

சிரிப்பு...!! [ சென்ரியு ]

*
எதற்கு சிரிக்கிறான் தெரியவில்லை?
சிரிப்பை நிறுத்தவில்லை
அருகில் வந்தவரும் சிரித்தார்.

திங்கள், 13 ஜூலை, 2015

அஞ்சலி.


*
இசையமைப்பாளர்
எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு.
*
மரணம் வந்தால் தெரிந்துவிடும் – நான்
மனிதன் என்று புரிந்துவிடும்.
ஊர் சுமந்து போகும்போது
உனக்கும் கூட புரிந்துவிடும்!!...
கவிஞர்.கண்ணதாசன் பாடல் – 369.

*

அஞ்சலி

இசைக்கு மரணமில்லை.
ந.க.துறைவன்.


ஞாயிறு, 12 ஜூலை, 2015

கேள்வி...!! [ HAIKU / ஹைக்கூ ]


*
கேள்வி கேட்க எழுந்தான்
கேட்காமலேயே உட்கார்ந்தான்
மௌனமாய்…..
*
And stood up to ask a question
Sat without
Silent,,,!!

*

சனி, 11 ஜூலை, 2015

நாவல்பழம்...!! [ Haiku / ஹைக்கூ ]


*
நிறமில்லாதது மனம்
மண்ணை நிறமாக்கியது
கீழே விழுந்த நாவல்பழம்.
*

சாபம்...!! [ லிமரைக்கூ ]

*
மனிதப் பிறப்பே இங்கொரு சாபம்
உயிர்களைப் பலி கொள்கின்றன
ஊழல் தேர்வு நிறுவனம் வியாபம்

*

வியாழன், 9 ஜூலை, 2015

மனம்...!!

Haiku – Tamil / English.

உள்ளே மலர்ச்சி வெளியே சாந்தம்
ஏகாந்த நிலையில்
சூன்யத்தில் இணைகின்றது மனம்.
*
Relax out in Bloom
Ekanta condition
Entering into the mind nothing

N.G.Thuraivan. 10-07-2015.

புதன், 8 ஜூலை, 2015

நன்கொடை

இயற்கை கொடுத்த நன்கொடை
பூக்கள் பழங்கள் நிறைந்தது
அழகான மரங்கள்
ந.க.துறைவன்.


துணை

தூக்கம் வரவில்லை என்று
தவிப்போர்க்குத்
தூக்க மாத்திரையே துணை.
ந.க.துறைவன்.