செவ்வாய், 23 செப்டம்பர், 2014

வாசிப்பு...!! [ iஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
ஆழ்ந்தப் புத்தக வாசிப்பு
வரிகளின் வசீகரிப்பு
இடையிடையே புன்சிரிப்பு.
*
பெண்ணின் கண்ணீராய்
சொட்டிக் கொண்டிருந்தது
தெருக் குழாய்.
*
கைக் கூடி வந்த பின்
எதையோ செய்யத் தூண்டுகிறது
ஏதோவொரு அதீத நினைப்பு.
- ந.க. துறைவன் ஹைக்கூக்கள்.

*

திங்கள், 22 செப்டம்பர், 2014

காற்று...!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
தரையில் சும்மாயிருக்கும்
சருகு இலைகளை சலசலவென
சிரிக்க வைக்கின்றன காற்று.
*
குரங்குகளின் விளையாட்டை
வேடிக்கைப் பார்த்து
பங்கெடுக்கின்றன அணில்கள்.
- ந.க. துறைவன் ஹைக்கூக்கள்.
*

சனி, 20 செப்டம்பர், 2014

பறத்தல்...!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU. 
*
நினைவுகளிலிருந்து எழுகிறது
அவ்வப்பொழுது மறக்காமல்
மறக்க நினைத்தச் சம்பவம்.
*
இடுப்பிலிருந்தக் குழந்தை
கீழே இறங்கியோடியது
பறந்து விட்டது சிட்டுக்குருவி.
*
பார்க்காமலிருக்க முடியாது?
பார்த்தாலும் யாருக்கும் தெரியாது?
விண்ணில் கிரகங்கள்.
*

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

வில்...!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
இலையும் தெரியவில்லை
கிளியும் தெரியவில்லை
பாய்ந்தது அர்ச்சுனன் வில்.
ந.க. துறைவன் ஹைக்கூ.

*

வியாழன், 18 செப்டம்பர், 2014

பதிவுகள்...!! [ சென்ரியு ]

*
NA.GA THURAIVAN'S SENRYU..
*
வலிமையான நட்புடன்
இரகசியங்கள் பாதுகாத்தார்கள்
உயிர்த் தோழிகள்.
*
மரணம் வரைக்கும் அழியாதது
நட்பின் தொடர்ச்சி
நினைவு அடுக்கின் பதிவுகள்.
ந.க. துறைவன் சென்ரியு.
*

புதன், 17 செப்டம்பர், 2014

நட்புடன்....!! [ சென்ரியு ]

*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
அறிமுகம் இல்லாதவரை
அறிமுகப் படுத்தினார்
அறிமுகமான நண்பர்.
*
பால்ய சினேகிதனிடம்
மனம் திறந்து சொன்னான்
மனசை அழுத்தும் பிரச்சினைகள்
*
துன்பத்தில் ஆறுதல்
இன்பத்தில் மகிழ்ச்சி
பகிர்ந்துக் கொண்டனர் நண்பர்கள்.
*
வலிமையான நட்புடன்
இரகசியங்கள் பாதுகாத்தார்கள்
உயிர்த் தோழிகள்.
*
மரணம் வரைக்கும் அழியாதது
நட்பின் தொடர்ச்சி
நினைவு அடுக்கின் பதிவுகள்.
*


செவ்வாய், 16 செப்டம்பர், 2014

விழிப்பு...!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*

தாயைப் பார்த்ததும்
நொடிகளில் மறைந்தது
குழந்தையின் துக்கம்.
*
பறவைகள் குரல் கேட்டு
விழித்துக் கொண்டன
மரங்கள். 
*


பாசமாய்...!! [ சென்ரியு ]







*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
அப்பாவை விரும்புகிறாள் மகள்
அம்மாவை வெறுக்கிறான் மகன்
ஆதிக்கம் செய்கிறது உளவியல்.
*
எட்ட நின்று  பார்க்கும் குழந்தை
அம்மாவின் மடியில்
வளர்ப்புப் பூனை.
*
கணவனின் கோபத் தெரிப்பு
மனைவி அழுகிறாள்
அருகில் சிரிக்கிறது குழந்தை.
*
அடிக்க வரும் அம்மாவை
வெறுப்பேற்றுகிறான்
குறும்புக்காரப் பாச மகன்.
*
பெண்ணின் துயர மனமாய்
காற்றில் பறந்துக் காய்கிறது

கொடியில் துணிகள்.

சனி, 13 செப்டம்பர், 2014

வாத்துக்கள்...!! [ சென்ரியு ]


*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
மருத்துவ பயிற்சி முகாமுக்கு சென்று
இலவச பரிசோதனைச் செய்துக் கொண்டன
வயது முதிர்ந்த வாத்துக்கள்.
*
வீடு காலி செய்தபோது
கிடைத்தது பாட்டியின்
பாக்கு இடிக்கும் உரல்.
*
போக்குவரத்து மாற்றம்
திணறி தவிக்கின்றன
தெரு மாடுகள்.
ந.க. துறைவன் சென்ரியுகள்.
*

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

மழைநாள்...!! [ ஹைக்கூ ]

*
NA.GA THURAIVAN'S HAIKU.
*
மழையில் நனைந்து ஈரமாய்
சன்னலோரம் ஓதுங்கியது
சிட்டுக் குருவிகள்.
*
இன்றும் நினைவிலிருக்கிறது
இருவரும் தொப்பலாய் நனைந்த
அந்த மழை நாள்.
*
எங்கும் ஒரே மாதிரியாய்
பெய்வது ஒய்வதில்லை
பருவ மழை.
*


வியாழன், 11 செப்டம்பர், 2014

ஞானம்...!! [லிமரைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S LIMARAIKU.
*
மூதாதையர்க்குத் தெரிந்தது மண்கலம்
இளந் தலைமுறைக்குத் தெரிந்தது
விஞ்ஞானச் சாதனம் விண்கலம்.
*
வீதியில் ஒரே பரபரப்பு
சாதிக் கலவரம் சூழ்ந்த நகரம்
பீதியில் கடையடைப்பு.
*
மனிதருக்குப் பிடித்தது மதுபானம்
போதையிலே பிறந்தது சிலருக்கு
கவிதை மெய் ஞானம்.
- ந.க.துறைவன் லிமரைக்கூ கவிதைகள்

*

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

முன்னேற்றம்...!! [ சென்ரியு ]

*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
கழுதைக்கு கல்யாணம் செய்கிறார்கள்
நாய்க்கு கல்யாணம் செய்கிறார்கள்
முற்போக்காக சிந்திக்கிறார்கள் மனிதர்கள்.
*
எந்த வேலையும் உருப்படியாகச் செய்யாமல்
அலைந்து அலைந்து எங்கும்
நிற்காமல் ஒடுகிறது நாய்கள்.
 *
வெளியில் போய் வரவே பயம்
அஞ்சுகிறான் மனிதன்
பாதுகாப்பாக இருக்கிறது நாய்கள்.
*
எப்பொழுது நடந்ததோ தெரியவில்லை
சம்பவம் யாரும் பார்க்கவி்ல்லை
பாதையில் நசுங்கிக் கிடந்தது நாய்.
*
மனிதர்கள் சைகையில் காட்டுகிறார்கள்
வாலையாட்டிக் காட்டுகின்றது நாய்கள்
அன்புடன் நன்றி.

*

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

மகிழ...!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
வறண்ட நெல்வயல்கள் எங்கும்
குட்டைகள் இல்லை
தவளைகள் குதித்து மகிழ…!1

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

நிஜம்...!! [ சென்ரியு ]

NA.GA. THURAIVAN'S SENRYU,
*
வாழைப்பழத்தில்
நாற்று நட்டார்கள்
மணக்கும் ஊதுபத்திகள்.
*
சுற்றுச் சூழல் மாநாட்டில்
வாழ்உரிமைக்களுக்கான
கழுகுகளின் ஆவேச உரை
*
நிஜத்தைச் சொன்னான் நம்பவில்லை
பொய்யைச் சொன்னான்
எல்லோரும் பாராட்டினார்கள்.
*
எங்கோ வெறுப்போடுப் போனான்?
என்ன நடந்ததோ தெரியவில்லை
மகிழ்ச்சியோடு திரும்பினான் ஊர்.
*
ஆசையோடு கடைக்குப் போனார்கள்
கடைகள் மூடியிருந்தது திடீரெனக்
குழந்தைக்களுக்கு பெருத்த ஏமாற்றம்.
*


செவ்வாய், 2 செப்டம்பர், 2014

மிரட்டல்...!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
நிமிர்ந்து துணிந்து வாழும்
புல்லின் வாழ்க்கைக்கு
வியாக்கியானம் தேவையா?
*
இறப்புக் காலம் வரை
நினைவில் நிற்கின்றது
பிறந்த ஊரின் நினைவு.
*
இளமையை நினைவூட்டுகிறது
விளையாடிக் களித்தக்
கிராமத்தின் மாந்தோப்பு.
*
எப்பொழுதும் கேலி செய்வாள்?
தூக்கி மடியில் வைத்து
கொஞ்சி வளர்த்தப் பாட்டி.
*
பழம் பொறுக்கப் போனால்
மிரட்டி விரட்டுவார்கள்
நாகமரத்தில் முனீஸ்வரன்.
*



திங்கள், 1 செப்டம்பர், 2014

நம்பிக்கை...!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
அரசமரத்தடியின் கீழ்
வரிசையாகயிருக்கின்றன
எண்ணெய்யில்லாத அகல்விளக்குகள்
*
ஏதோவொரு நம்பிக்கையில்
தினமும் நடந்தேறுகிறது
நம்பிக்கை இழந்தவன் வாழ்க்கை.
*
தேடுகின்றவனுக்கு கிடைக்கவில்லை
தேடாமல் நினைத்திருப்பவனுக்கு
தேடாமல் கிடைக்கிறது மெஞ்ஞானம்.
*   


வெளியேற்றம்....!! [ ஹைக்கூ ]

*
NA. GA. THURAIVAN'S HAIKU. 
*
பகையுணர்ச்சி நெஞ்சில்
எப்படி புகுந்தது?
மாம்பழத்தின் உள்ளே வண்டு.
*
கிராமத்துப் பெண்களின்
சிறுத்த இடையில்
நீரில்லாத காலிக் குடம்.
*
காட்டில் வாழப் பிடிக்காமல்
வெளியேறி ஊருக்குள்
புகுந்து விட்டன சிறுத்தைகள்

*