.மரத்தில் ஆயிரம்
பூக்கள் பூத்திருக்கலாம். அவையெல்லாமே அழகான பூக்களாகவே காட்சி தரும். இயற்கையின் சுற்றுச்சூழலினால்
எத்தனையோ பூக்கள் பாதிக்கப்பட்டுள்ளது நமது கண்களுக்குக் கூடத் தெரியாது. ஆனாலும் அதில்
சிலப் பூக்கள் மட்டுமே பாதிக்காமல் சாமளித்து தூய்மையானதாக இருக்க முடியும். அது போன்றது
தான் ஹைக்கூ. ஆயிரமாயிரமாய் எழுதினாலும் ஏதோவொரு சில மட்டுமே ஹைக்கூவாக மிளிர்ந்து
பளிச்சிடுகின்றது. அந்த ஒன்றே வாசகர் மனதைத் தொடும் தூண்டும். அந்த ஹைக்கூவை யாராலும்
திரும்பச் சொல்ல முடியும். மறக்க முடியாது. அத்தகைய கவிதை எதுவோ அதுவே ஹைக்கூவாகும்.
ஹைக்கூ எழுதுங்கள். ஹைக்கூவாய் வாழுங்கள்.
அன்றும் இன்றும்
என்றும் ஹைக்கூ எழுதுவது எளியதாகி வி்ட்டது
ஹைக்கூ என்றாலே எழுதுவதற்கு சிறியதான ஒரு வரிவடிவம் என்று தான் புரிந்துள்ளார்கள்.
எது ஹைக்கூ என்ற கேள்வி இங்கே தொடர்ந்துக் கேட்கப்பட்டு வருகின்றன? அதற்கான விடைகள்
பலரும் பலவிதமாக அளித்துள்ளது ஆறுதலடைகின்ற வண்ணமாகவே இல்லை எனலாம். ஹைக்கூவை யாரும்
எழுத வேண்டாம் என்று சொல்லவில்லை. எழுதுங்கள் என்று தான் சொல்கின்றார்கள். ஆனால் அதைக்
கொஞ்சம் புரிந்து எழுதங்கள என்று தான் கூறுகின்றார்கள். அதற்காக கொஞ்சம் மெனக்கெட்டு
ஹைக்கூ நூலகள் கவிதை வாசிப்பு அவசியம் என்றே
சொல்லலாம் அப்பபொழுது தான் அதைப் பூரணமாக உள்வாங்கிக் கொ்ண்டு எழுதப் பழக முடியும்
என்பதே என்து கருத்தாகும். ஹைக்கூ என்பது மனம் சார்ந்த தத்துவம். உணர்வுப்பூ. உணர்ச்சிப்பூ.
அதொரு மௌனப்பூ.
இடி பலத்தக் காற்று.
மழையின்னும் ஆரம்பிக்கவில்லை. காற்றில் மரங்கள் பேயாட்டம் போட்டன. முருங்கைகள் பலமிழந்து
முறிந்து விழுந்து விட்டன. அதில் உள்ள காய்களைக் கீரைகளைப் பறித்துக் கொள்ள, அருகில்
வாழும் பெண்கள் ஓடிவந்து மடமடவென்று ஒடித்து எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் முகங்களில்
ஓசியில் ஒருநாள் சமையலுக்கு காய்கள் கிடைத்ததென்று பெரும் மகிழ்ச்சி. மரத்தின் வீட்டுக்குச்
சொந்தக்காரர் விரைந்து வந்து அவர்களை விரட்டியடித்தார். கிடைத்தவரை லாபமென்றுபெண்கள்
ஒதுங்கிப் போய்விட்டார்கள். காற்று அடங்கி பலத்த மழைத் தொடங்கியது.
எங்கு தேடினாலும்
கிடைக்கவில்லை. கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேடிக் கொண்டேயிருந்தான். எங்கு வைத்தோமென்று
யோசித்துப் பார்த்தான். கவனத்திற்கு வரவில்லை ஞாபக மறதி வந்துவிட்டதோ என்று பயந்தான்.
பயம் பல நேரங்களில் மனிதர்களை பயமுறுத்திப் பார்க்கும். பயந்தவர்கள் யாரும் தைரியசாலிகள்
இல்லையா என்ன?. முக்கியமான பொருள் என்பதால் மனதில் பதட்டம் அதிகரித்தது. எப்படியும்
கிடைத்துவிடும் என்ற உறுதியோடு தேடினான். பளிச்சென்று ஞாபகம் வந்துவிட்டது. அங்கே போய்
பார்த்தான். பொருள் வைத்த இடத்திலேயே பத்திரமாக இருந்தது. சிக்கலானப் பிரச்சினையிலிருந்து
தப்பித்தோம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டான்.
பள்ளி மாணவர்கள்
பத்தாம் வகுப்பு, +2 வகுப்பு பாடங்களில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார்கள்
என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கின்றது. பாராட்டலாம். இந்த தேர்ச்சி எப்படிப்பட்து என்புது
தான் கேள்வி. மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்து, அதை அப்படியே பரிட்சையில் பதிவு செய்ய
வைப்பது ஒரு தேர்வா? மனனம் செய்து எழுதியதை
விடைத்தாள்கள் திருத்துபவர்கள் எப்படி முழுமையான சரியான விடையென்று மதிப்பெண் அளிக்கின்றார்கள்?
அரசும் இதை எப்படி சரியானமுறையென்று அதிக மதிப்பெண் அள்ளிக் கொடுக்க அனுமதியளிக்கின்றது.
இது தான் கல்விமுறையா?