நந்தியின் காதில் ரகசியமாய்
பிரார்த்தனை சொல்லி
முறையிட்டாள்
மௌனமாய் கேட்டார்
மீண்டும்
அடுத்தொருவள்வந்து
காதில் முணுமுணுத்தாள்
நந்தி சலிக்காமல் கேட்டார்
எல்லோரும்
தொந்தரவு செய்வதறிந்து
கம்பி வேலிப்போட்டு
சிறைப்படுத்தி விட்டனர்
நந்திதேவனை
இப்பொழுது
நிம்மதியாய் நந்தி...
ந க துறைவன்.
1.
மழைத் துளிகள் உடலில் பட்டதும்
சிலிர்த்து எழுந்தன
நீரின்றி வாடிய தவளைகள்.
2.
தவளைகள் நீண்ட உரையாடல்
மகிழ்ச்சி ஆரவாரம்
மழைக் குறித்து விமர்சனம்.
3.
எத்தனை நாளாச்சு?
ஆரோக்கியமாய் குளிச்சி
மழைநீரில் மரங்கள்.
4.
நிலவொளி அற்ற இரவு
வெளியெங்கும் மழை இரைச்சல்
வாகனங்கள் பாய்ச்சும் ஒளி.
5.
மழைக்கு ஒதுங்க
இடம் தேடி அலைகின்றன
தெரு நாய்கள்.
ந க துறைவன்.