ஞாயிறு, 11 அக்டோபர், 2015

உயில்கள்....!! [ ஹைக்கூ }

Haiku – Tamil / English.
*
பிறக்கின்றன இறக்கின்றன
மீண்டும் எடுக்கின்றன
மறுபிறவி உயில்கள்.
*
Born die
Back-up
Wills reincarnation.
N.G.Thuraivan.

*

புதன், 7 அக்டோபர், 2015

எச்சரிக்கை...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English;.
*
இன்னும் புரியவில்லை
இலையின் அசைவுகள்.
பறவைகளுக்கு எச்சரிக்கையோ?
*
Still do not understand
Leaf's movements.
Warning to birds?

*

செவ்வாய், 6 அக்டோபர், 2015

அதிர்ச்சி...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English;.
*
நடுங்கியது உடல்
ஓடு பாதையில் பிணம்
அதிர்ச்சி தாங்காத மனம்
*
Body trembled
Corpse track
Mind the unbearable trauma

*

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

வாடல்...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English.
*
அழகாய் பூத்திருக்கும்
சந்தோஷ சிரிப்பிருக்கும்
எதற்கு வாடியது தாயின் முகம்?
*
The impressive Booth
The happy grin
Force was what the mother's face?
*

சனி, 3 அக்டோபர், 2015

சிந்தனை...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English.
*
எதற்காக புறப்பட்டதோ?
திசை அறிந்து பறக்கிறது
செயலாகும் சிந்தனை.
*
Came from and for what?
Knowing the direction of the Flies
The thought process.

*

வியாழன், 1 அக்டோபர், 2015

நாதம்...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English;
*
மௌனமாய் என்னுள்
கரைந்தது
இசையின் நாதம்.
*
Silence me
Dissolved
Tone of the music  
N.G.Thuraivan.

*

காந்திய சிந்தனை...!!


*
தமிழ்ச் சிறுவர்கள் எல்லோரும் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர்கள் ஆகையால், அவர்களுக்குத் தமிழ் அவ்வளவாகத் தெரியாது. தமிழ் எழுத்துக்கள் அவர்களுக்குக் கொஞ்சமும் தெரியாது. ஆகவே, அவர்களுக்கு நான் தமிழ் எழுத்துக்களையும் ஆரம்ப இலக்கண விதிகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டியிருந்தது. இது மிகவும் எளிதானதே. தமிழில் பேசுவதில் என்னை எப்பொழுதும் தாங்கள் தோற்கடித்துவிட முடியும் என்பதை என் மாணவர்கள் அறிவார்கள். ஆங்கிலம் தெரியாத தமிழர்கள் என்னைப் பார்க்க வந்தபோது அம்மாணவர்கள்  என் மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தனர். எனக்கிருந்த அறியாமையை என் மாணவர்களுக்குத் தெரியாமல் மறைக்க நான் என்றுமே முயன்றதில்லையாகையால், நான் சந்தோஷமாகவே சமாளித்து வந்தேன். உண்மையாகவே எல்லா விஷயங்களிலும் நான் எவ்விதம் இருக்கிறேன் என்பதை அவர்களுக்குக் காட்டி வந்தேன். ஆகையிளால், அம்மொழியில் எனக்கு ஒன்றுமே தெரியாமல் இருந்நதபோதிலும் அவர்களுடைய அன்பையும் மரியாதையையும் மாத்திரம் நான் என்றுமே இழந்ததில்லை. முஸ்லிம் சிறுவர்களுக்கு உருது சொல்லிக் கொடுப்பது இதைவிட எளிதாக இருந்தது அம்மொழியின் எழுத்துக்கள் அவர்களுக்குத் தெரியும். படிக்கும்படியும், கையெழுத்தை விருத்தி செய்து கொள்ளுமாறும் அவர்களை உற்சாகப்படுத்துவதே நான் செய்ய வேண்டியிருந்ததெல்லாம்.
இச்சிறுவர்களில் பெரும்பாலானவர்கள், எழுத்து வாசனையையே இதற்கு முன்னால் அறியாதவர்கள், பள்ளிக்கூடங்களுக்குச் சென்றும் அறியாதவர்கள். ஆனால், அவர்களுக்கு இருந்த சோம்பலைப் போக்கி, அவர்கள் படிக்கும்படி மேற்பார்வைப் பார்ப்பதைத் தவிர அவர்களுக்கு நான் சொல்லிக் கொடுக்க வேண்டியது அதிகமில்லை என்பதை அனுபவத்தில் கண்டேன். இவ்வளவோடு நான் திருப்தியடைந்து விட்டதால், பல வயதையுடையவர்களையும்,  சமாளிப்பது சாத்தியமாயிற்று.
ஆதாரம் ; - மகாத்மா காந்தியின் சுய சரிதை – “ சத்திய சோதனை ”– பக்கம் 404-405.
தகவல் ; ந.க.துறைவன்